Saturday, March 31, 2007

கதை கேளு - part 4

அம்மாவின் அப்பா மற்றும் அம்மா,

MVV தாத்தா, லக்ஷ்மி பாட்டி,

முதல்ல பாட்டி ன்னு சொன்னதுக்கு வாங்கப்போகிறேன் நான். மன்னியம்மா ன்னு தான் கூப்பிடனும் என் அம்மா வை பெற்ற பாட்டியை. பாட்டி னு கூப்பிட்டா அப்படி ஒரு கோபம் வரும் அவருக்கு.

MVV(M.V.Venkataraman) தாத்தா க்கு பட்டுக்கோட்டை பக்கத்தில் ஒரு ஊர். பெயர் 'மண்ணங்காடு'. கடற்கரை யிலிருந்து 3-4 KM இருக்கும். தென்னை, மா, பலா மரங்கள் நிறைய உண்டு. இவருக்கும் விவசாயம் தான் தொழில். இவரின் முன்னோர் தஞ்சாவூர் ராஜா வின் அரசவையில் மந்திரி யாக பதவி வகித்துள்ளனர். அப்போது ராஜா கொடுத்தது தான் இதையும் சேர்த்து 10 ஊர். பிராமிணர்கள் அதிகம் வாழாத பகுதியும் கூட. தாத்தா வின் பக்கத்து ஊரான 'துவரங்குறிச்சி' தான் நம் முன்னால் ஜனாதிபதி 'R.VENKATARAMAN'. தாத்தா Metric வரையில் படித்தும் இருக்க்கிறார். கை வேலை செய்வதில் தேர்ந்தவர். அதிலும் தச்சு வேலை நன்றாகவே செய்வார். எனக்கு தெரிந்து இவரே செய்து கொடுத்த dressing table தான் என் அம்மா, மற்றும் சொந்தங்களிம் உள்ளது.வ்யாபகம் கொஞம் அதிகம் இவருக்கு. மைக் இல்லாமலேயே கூட்டங்களில் பேசக்கூடிய குறள். அவர் ஊரில் 7-8 மாந்தோப்புகள் & 2-3 பலா தோப்புகள் இவருக்கு உண்டு. விடுமுறை நாட்களில் நாங்கள் அங்கு போகும் பொழுது எங்களையே தன்னுடன் அழைத்து போய் வேணும் வகைகளை பறித்துபழுக்க வைத்து தருவார். எவ்வளவு காய்கள் காய்த்தாலும் விலைக்கு ஒன்று கூட விற்க மாட்டார். சொந்தங்களுக்கு கொடுத்து விடுவார். வாழ்க்கையை ரொம்ப சுவாதீனமாக, மிகுந்த அலட்டல் இல்லாமல், போகும் போக்கிற்கு விட்டு, எல்லாவற்றையும் துனிச்சலுடன் எதிர்கொண்டு வாழ்ந்தவர். தன் கடைசி காலத்தில் என் கூட என் வீட்டில் இவரும், மன்னிம்மா வும் தங்கியது எனக்கு சந்தோஷம்.

மன்னியம்மா:-

இவரை பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்று அம்மா கேட்டார் இன்று. ஏன் இல்லை? உடுமல்பேட்டை பக்கத்தில் 'கொழுமம்' என்னும் ஊரில் ஒரு ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். செல்வ செழிப்போடு வாழ்ந்த குடும்பம். உலக அறிவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் அண்பு 200% உண்டு. எனக்கு ஓவராக செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து இருப்பதாக இன்றளவில் என் அப்பாவிற்கு இவர் மேல் வருத்தம் உண்டு. என் 4 வயது வரை இவர் இடுப்பிலிருந்து என்னை இறக்கியதில்லை. வீட்டு வேலைகளும் அவ்வளவாக கற்காதவர். எல்லோருக்கும் இவரை பிடிக்கும். நாங்கள் பேத்தி, பேரன்களை கண்டால் தலை கால் புரியாது. எங்களோடு நாங்கள் என்ன விளையாட்டு விளையாடினாலும் சமமாக கலந்து கொள்வார். 4 குழந்தைகள் பெற்று அவர்களுக்கே பேத்தி, பேரன்கள் இருந்தும் இன்னமும் ஒரு குழந்தையாகவே வாழ்பவர். மீண்டும் என்னுடன் வ்ந்து இருக்கும்படி கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் இவரை.


என் ஊர்............................. இதை பற்றி அடுத்த பதிவில்....

No comments: