Sunday, December 28, 2008

கதை கேளு.. கதை கேளு....பாகம் 12

இந்த முறை சற்று தாமதமாக ......

ஆனாலும் இனி தொடர்ந்து எழுதலாமென்று .....

சரி, இவ்வளவு நாள் எங்க மா போயிருந்த நீ???

சும்மா தான் இருந்தேன்... பெரிசா ஒன்னும் வெட்டி முறிக்கல. சோம்பல் தான்..

OK. இன்றைய தலைப்பு...

சுய புராணத்தை தொடர வேண்டியது தான்.

So. மாமியார் மற்றும் மாமனார் பற்றி.


மாமியார்
சில பெண்கள் தோற்றத்தில் அவர்களின் அம்மாவைப் போல் இருப்பார்கள். ஆனால் மாமியாரைப் போல் மருமகள் இருக்க முடியுமா? முடியும். உதாரணம் நான். இத்தனைக்கும் நான் அவர்களுக்கு உறவும் இல்லை.

இதோ நாங்கள் இருவரும் ஊட்டியில்....





என் கல்யாணத்துக்கு வந்தவர்கள் அவரிடம் கேட்ட முதல் கேள்வி, கல்யாணம் உன்

பெண்ணுக்கா? பையனுக்கா?? என்று தானாம். அந்த அளவு எங்களுக்குள் உருவ ஒற்றுமை.

என்னை பெண் பார்க்க வந்த அன்றே தன் சம்மதத்தை சொல்லி விட்டார். எல்லாமே அவருக்கு Short and Crisp ஆக இருக்க வேண்டும்.

கடவுளே ஆனாலும் தப்புன்னா தப்பு தான் அவருக்கு.குடும்பத்தில் ஒரு விதமான Detached
Attachment அவருக்கு. வந்தியா? வா. போறியா?? போ. இது தான் அவரின் குணாதிசயம்.

வீட்டு வேலைகளிலோ, சமையலிலோ குறை ஒன்றும் வைக்க மாட்டார். அதுவும் என்
மாமனாரை கவனிப்பதில் தனி அக்கறை. எல்லா வேலைகளும் முடிந்தவுடன் பூஜை செய்ய
போனால் 1 மணி நேரம் ஆகும்.

பெரிய family க்குள் தம்மை ஒரு முழுமையுடன் புகுத்திக்கொண்டு, அதன் ups and downs
ல் என் மாமனாருக்கும் தோள் கொடுத்தவர். முதல் மாட்டுப்பெண் எப்படி நடக்க
வேண்டுமோ, அப்படி இருந்தவர்.

பரமாச்சார்யாள் மேல் அளவு கடந்த பக்தி. இல்லை அதற்க்கும் மேல். ஈடுபாடு சொல்லலாம்.
பட்டு கட்ட மாட்டார். படாடோபத்தில் அவருக்கு ஆர்வம் இல்லை. தன்னையும் அழகு
செய்வதில் விருப்பம் கிடையாது. பிறர் சமைத்தால் சாப்பிட மாட்டார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியே போவதை தவிர்த்து விடுவார்.

தவறாமல் மாதம் தோறும் போகும் ஒரே இடம்..

காஞ்சிபுரம்.

மாமனார் வேலையிலிருந்த சிதம்பரத்திலிருந்து பஸ் பிடித்து காஞ்சி போய் பரமாச்சார்யாரை பார்த்து விட்டு உடனே திரும்ப வந்து விடுவார். என்ன பேசுவாரோ, என்ன கேட்பாரோ தெரியாது. சில சமயம் சொல்வார். நிறைய ஆன்மீக புத்தகங்கள் படிப்பார். பகவான் ரமனரிடமும் அவரின் அறிவுரைகளிலும் ஈடுபாடு.

மொதத்தில் நம் சிற்றரிவுக்கு எட்டாத விஷயங்களில் நாட்டம்.

மாமனார் சில சமயம் ரொம்ப கோவமாக" நான் ஒரு நாள் உங்களை எல்லாம் விட்டுட்டு
போக போறேன், நீங்க எல்லோரும் சிரமப்பட போறீங்க" என்று சொல்வார். அதுக்கு மாமியார்
அப்படி தான் நடக்கனும் னு இருந்தா, நடக்கட்டும் என்பார் கூலாக.

எல்லாம் சரி தான். அவரிடம் என்க்கொரு வருத்தம் உண்டு. தன் உடல் ந்லையில்
அக்கறையே எடுத்துக்கொள்ள மாட்டார். BP, Hyper tension எல்லாம் உண்டு. ஆனால்
அதற்கு உண்டான வைத்தியத்திற்கு ஒத்துப்போக மாட்டார். எங்கேயாவது நம்மை
ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டால் நம் ஆசாரம் போய் விடுமே என்ற பயமாக கூட
இருக்கலாம்.

மாமனார் ரிடையர் ஆகி அவர்களும் மயிலாடுதுரை ஜாகை வந்தவுடன், அவர் போகும்
கோயில், மடங்களின் என்னிக்கையும் அதிகம் ஆகின. ஆனால் இப்பொழுது தன் பிள்ளையின்
(சுதாகர்)நலனுக்காகவே இருந்தது. என் மகள் பிறந்தவுடன் முன் இல்லாத அளவு
குடும்பத்தில், முக்கியமாக பேரப்பிள்ளைகளின் பேரில் பற்று அதிகம் ஆனதாக எனக்கு
தெரிந்தது.

சில சமயம் சொல்லிக்கொள்வார், "இப்படியே உழன்று கொண்டே இருந்தால் எப்ப தான் கரை
ஏறுவது?" என்று. எல்லோரும் ஒரு நாள் கரை ஏற காத்திருப்பவர்கள் தான். ஆனால் அவர்
போல் அவசரம் அவசரமான் இல்லை.

முதல் நாள் December லீவு காரணமாக என் நாத்தனாருடன், என் பையணையும் அவள்
பைய்ணையும் அனுப்பி விட்டு, நானும் சுதாகரும், என் பெண்ணுடன் மறுநாள் போவதாக
ஏற்பாடு. அவர்களுக்கு அன்று இரவு, சாதம் பிசைந்து போட்டு, ரொம்ப நேரம் என்
நாத்தனாரிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு படுக்கப் போனவர். விடியற்காலையில் நெஞ்சு
வலி என்று டாக்டரிடம் காட்ட போயிருக்கிறார். எங்களுக்கும் போன் வந்து சீக்கிரமே
கிளம்பிவிட்டோம்.

ஹாஸ்பிடலில் ECG erratic ஆக இருந்தவுடன் Heart Attack என்று உறுதி செய்து
thrombolise செய்ய மருந்து கொடுத்தும், போய்விட்டார். அதும் எப்படி, அன்று காலை
சாப்பிட்ட காபி வரை அவர் கையாலேயே சாப்பிட்டுவிட்டு. மற்றவரை எதிர்ப்பர்க்காமல்.
யாருக்கும் , பிள்ளையின் வரவுக்கு கூட, காத்திராமல். 64 வயதிலேயே.

அவர் இன்னும் இருந்து தன் பிள்ளையின் உயர்வுகளை பார்க்காமல் போனது எல்லாருக்கும் வருத்தம். இன்று வரை மாமனார் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான் தான் இங்கே கஷ்டப்படுகிறேன் என்று. சரி தான்.

புருஷன் இல்லாமல், விதவை பெண்களால் காலம் தள்ளி விட முடிகிறது. ஆண்களால் பெண்டாட்டி இல்லாமல் அவர்களின் வாழ்வில் ஏன் ஒரு வெறுமை சூழ்ந்து விடுகிறது???

Male Chauvinists யாராவது பதில் சொல்லுங்கள்.


அடுத்தது மாமனாரைப் பற்றி........................







Wednesday, June 04, 2008

Which flower are you?

Hey try this!!
Very interesting!!


I am a
Sunflower


What Flower
Are You?


Tuesday, June 03, 2008

தைவான் பயணம் பாகம் - 4

தைபே 101




இண்று வரை உலகின் உயரமான கட்டிடம்....

101 தளங்கள்..
101 mall 1- 5 தளங்களில் உள்ளது. அதற்கும் மேல் 96 மாடி.

Mall வாயிலில் நாங்கள்

ஐந்தாவது தளத்தில் இருந்து 89 வது தளத்தின் வரை அதி வேக லிஃப்ட் போகிறது.. defying the G force 37 seconds ல் ஏறுகிறது.
ஏறும் போது கொஞ்சம் பயம் இருந்த்து எனக்கு.. சமாளித்து விட்டேன்.
மேலே போன வுடன் உலகமே என் காலடியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு. அங்கிருந்து பார்ப்ப்தற்கு எந்த பக்கத்தில் என்ன இடம் தெரியும் என்று சொல்வதற்கு ஃபோன் போன்ற ஒன்றை வாடகைக்கு எடுத்து க்கொள்ளலாம்.
வழக்கம் போல souvenir மற்றும் காபி கடைகள் இருக்கிற்து.
ஒரே பவழ கல்லில் ஆன புத்தர்..


மேலேயிருந்து சில படங்கள்






அடுத்து போனது Chiang Kai sheik Memorial... அடுத்த பதிவில்


Sunday, June 01, 2008

தைவான் பயணம் பாகம் - 3

06/05/07- திங்கள்

அடுத்த நாள் காலையிலேயே எங்கள் கைடு வந்து அந்த ரிசார்ட்டிலிந்து மீட்டு விட்டார். அங்கிருந்து நாங்கள் போனது PU LI - க்கு. இது ஒரு பழமையான wine தயாரிக்கும் இடம். இங்கு நிறைய winery இருக்கிறது.

Wine Museum வாசலில் பெரிய சைஸ் ஜாடி முன் நாங்கள்.






பல வகைகளில் ஜாடி,





Wine Cellars


எல்லா வகை Wine யும் டேஸ்ட் க்கு கொடுக்கிறார்கள். நான் எனக்கு மிகவும் பிடித்த பீச் (peach) வாசனையுடன் ஒரு சின்ன பாட்டில் வாங்கினேன்.



அடுத்து நாங்கள் போன இடம்.. CINGJING FARM


ஆடுகள் வளர்ப்பதற்காக உள்ள ஒரு பெரிய சைஸ் farm.
Breathtaking views இங்கு.







பச்சை பசேல் மலைகளின் backdrop ல், கண்ணுக்கு குளிர்ச்சியான புல் வெளிகள். இங்கேயும் peaches ஏராளம்.

அன்று மாலையே தைசுங் திரும்பிவிட்டோம்....
அடுத்து வந்த 2 நாட்களும் hectic business விஸிட்கள்.
தைபே ..... Taipei... Taiwan's capital City.
ஒரு நாட்டின் தலைநகரத்தின் எல்லா அம்சங்களுடன் அழகான நகரம்..
தைபே மெட்ரோ நல்ல connections , மலிவும் கூட..
முதலில் நாங்கள் பார்த்தது... Taipei 101
இதைப்பற்றி அடுத்த பதிவில்

Friday, July 27, 2007

தைவான் பயணம்- பாகம் 2

06/05/07 - ஞாயிறு
முதல் நாள் இரவு டின்னரின் போதே Phyllis எங்கள் கையில் அடுத்த 2 நாட்கள் நாங்கள் போகும் TOUR பற்றிய விவரம் அனைத்தும் தந்துவிட்டார். நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்ட்டலின் மூலமே ஏற்பாடு. PICKUP Point- ம் அதே தான். 2 நாட்களுக்கான துணிகள் & சாப்பாடு மட்டும் எடுத்து கொண்டோம்.
Breakfast ஹோட்டலிலேயே. அது ஒரு பெரிய கொடுமை. எல்லா வகையான Bread, muffins, cereals, fruits and vegetables & juices இருக்கும். ஆனால் ஒரு வாய் கூட நிம்மதியா சாப்பிட முடியாது.
நம் எதிரிலேயே கண்ணாடி பெட்டிக்குள் மீன், lobster & நண்டு வகைகள் தண்ணீரில் மிதக்கும். யாருக்கு எது விருப்பமோ அதை அங்கேயே பிடித்து பாதி வேக வைத்து கொடுப்பார்கள்.


இங்கே இவர்களின் special உணவு "PINYIN" ( LITERALLY TEA LEAF EGG)



எனப்படும் டீ தண்ணீரில் வேக வைத்த முட்டை.
அவங்களுக்கு அது விருந்து. நமக்கோ அது கொடுமை தான்.


பாதி வெந்த மாமிசத்திற்கு ஒரு வகையான வாடை உள்ளது.

இந்த கொடுமைக்கு சாப்பிடாமலேயே இருந்து விடலாம். ஆனால் பசிக்கு என்ன செய்வது?? பழங்கள், Bread, cereals சாப்பிட்டு வைத்தோம்.

முதல் நாள் டின்னருக்கு முன் கொஞ்ச நேரம் கிடைத்தது. அதில் நாங்கள் தைசுங்கில் இருக்கும் "Jade Market" போனோம்.
அங்கு TCS, பங்களூரில் வேலை செய்யும் 4 Indians ஐ பார்த்தோம். அவர்கள் இங்கு உள்ள ஒரு நிருவனத்திற்கு software support கொடுப்பதற்காக வந்துள்ளனர்.
அதில் 1 பெண். மற்ற மூவர் ஆண்கள். எல்லோருக்குமே 30 க்குள் தான் வயது இருக்கும். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்தனர்.
அவர்களை Breakfast -ல் பார்த்தோம். "எப்படி சாப்பாடு manage செய்கிறீர்கள்" என்று கேட்டோம். ஊரிலிருந்து வரும் போது ஒரு பெட்டி நிறைய சாப்பாட்டுக்கு அரிசி, பருப்பு, மற்றும் எங்களப்போல் MTR சாம்பார், curries எல்லாம் கொண்டு வந்தோம். இதில் அந்த பெண் எல்லோருக்கும் சமையலும் செய்கிறார் என்று சொன்னார்கள்.
Reception ல் எங்களின் மற்ற பெட்டிகளை 'safe custody' யில் வைத்துவிட்டு 2 நாள் Tour போக கிளம்பினோம்.
எங்களை அழைத்துப்போக Mr. STEVE KHO
வந்து விட்டார். ஆங்கிலம் பேச தெரிந்த University Student. இது part time வேலையாம்.
எங்கள் ஹோட்டலிலிருந்து கிளம்பி இன்னும் 2 பேரை அழைக்க தைசுங் railway station க்கு போனோம்.
இங்கே நான் தைசுங் ரயில்வே ஸ்டேஷன் வெளியில்

எங்களுடன் அன்று சேர்ந்தவர்கள் ஒரு ஜப்பானிய குடும்பம். அந்த குடும்ப தலைவர் TAIWAN SINKANSEN PROJECT ன் CHIEF ENGINEER.
அவர் மணைவி ஒரு சைனீஸ். அவர்களின் மகள். இவர்கள் எங்களின் அன்றைய சக பயனிகள்.
PU-LI போய் சேர 2-3 மணி நேரம் ஆனது. தைவான் நாட்டை பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் நிறைய தகவல்கள் சொன்னார் எங்கள் Guide.
அந்த ஊர் போகும் வழி எங்கும் 2 பக்கங்களும் பாக்கு மரங்கள் தான். பாக்கு பெரிய வியாபாரம் இங்கே என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல் சாலைகளின் ஓரத்தில்
கொஞ்சம் உயரமான ஒரு ரூம் கட்டி அதில் இளம் வயது பெண்களை Bikini யில் உட்கார வைத்து இருக்கிறார்கள். அவர்கள் பச்சை பாக்கு, சுன்னாம்பு இரண்டையும் வெற்றிலையில் சுற்றி
இது போல

10 piece ஆக ஒரு பாக்கெட்டில் போட்டு வைப்பார்கள். அதை அந்த வழியாக செல்லும் Truck drivers வாங்கி மெல்கிறார்கள். ம்... நம்ம ஊருல மட்டும் தான் இந்த பழக்கம் னு நினைச்சு இருந்தேன். அங்கேயும் இருக்கு. ஆனா நம்ம ஆட்கள் மாதிரி 'புளிச்' னு கண்ட இடங்கள் ல துப்பரது இல்ல. சாறை விழுங்கிவிட்டு சக்கையை தான் துப்புகிறார்கள்.

பாக்கு தவிர வாழைப்பழம், Peaches, Cranberry,grapes, pineapple,sugarcane மற்றும் மரவள்ளிக்கிழங்கு நிறைய விளைகிறது. PULI போகும் வழி எங்கும் மலைகள் தான்.
Sun, Moon Lake போய் சேர்ந்த போது Lunch Time ஆகி இருந்தது. Lake ன் கரையிலேயே நிறுத்தி விட்டு சாப்பிட போனார்கள் எல்லோரும். நானும் தீபாவும் எங்கள் மடி சாப்பாட்டை முடித்தோம். ஆளுக்கு 3 thepla. Ice Cream கிடைக்குமா என்று தேடி கண்டு பிடித்தோம். அப்படியே சின்ன round shopping.
தீபா ஏரியின் வாயிலில்


Sun, Moon lake தைவானின் ஒரு கலாச்சார சுற்றுலா மையம். இது தைவானின் largest Natural Lake ம் கூட. சுற்றிலும் பச்சை பசேலென்று மலைகள் சூழ்ந்த ஒரு அருமையான setting இந்த இடத்திற்கு. கிழக்கில் round ஆகவும் மேற்க்கில் பிறை போல் இருப்பதாலும் இதற்கு இந்த பெயர். ஏரியில் சுத்தமான தண்ணீர் நீல நிறத்தில் அதிகம் மாசு
படாமல் இருக்கிறது. இதில் Boating உண்டு. நாங்களும் சென்றோம்.

படகின் உள்ளே

இந்த ஏரியை சுற்றி 3 சைனீஸ் கோயில் இருக்கிறது. 1. WEN WU TEMPLE - இது Confucius க்கும் Kuangkung க்குமானது.
இந்த கோயிலின் உள்ளே நான்

கோயிலின் வாசலில் தீபா

இவரோடு இங்கு வேறு 2 கடவுள்களும் உண்டு. அவர்கள் Gods of Martial Arts ஆன Guonggong and Yuehfei.
அந்த கோயிலின் உள்ளே தீபா

இந்த கோயில்களின் வாயிலில் உள்ள உலக உருண்டையை பிடித்த மாதிரி இருக்கும் 2 சிங்கங்கள் தைவானிலேயே பெரியதாம்.
இதோ ஒரு சிங்கத்தின் முன் தீபா


2. HUANGCHUANG TEMPLE - ஆமாங்க நமக்கு பரிச்சயமான அதே சீன யாத்திரீகர் தான் இவர்.
இந்த கோயிலின் வாயிலின் முன் நான்

சமஸ்கிரத மொழியில் தேர்ந்த இவர் இந்தியா உள்ளிட்ட பல அண்டை நாடுகளுக்கு வந்து அங்குள்ள நல்ல இதிகாசங்களையும் வேதங்களையும் எடுத்து சைனா வுக்கு கொண்டு வந்து மொழிபெயர்த்து, 'Buddhist Records of the Western World' ஆக தன் மக்களுக்கு கொடுத்தவர். இவரின் மறைந்த உடலின் பாகங்கள் இந்த கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.
இவரின் நினைவாக எழுப்பியிருக்கும் கல்லின் அருகே நாங்கள்

3. Xuang Guang Temple & Tzuen Ta - The pagoda இது Chiang Kai Shek தன் அம்மா, Madam Wang ன் நினைவாக கட்டியது. 1000 மீட்டர் உயரம் இது.
இந்த ஏரியின் நடுவில் ஒரு தீவும் உண்டு. இதன் பெயர் Lalu. இங்கு பயணிகளை அனுமதிப்பதில்லை. இன்னொரு கோடியில் Tehuashe Aboriginal Village இருக்கிறது.
இதையெல்லாம் பார்த்து விட்டு இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் Natural spring யும் போய் பார்த்தோம்.
போகும் வழியில்


இந்த இடத்தோடு எங்களின் அன்றைய Tour முடிவடைந்தது. எங்களை (myself & deepa) ஒரு Health Resort & Spa
இந்த இடம்

வில் 5PM க்கு கொண்டு விட்டு விட்டார்கள். புது இடம். English ஏ தெரியலை யாருக்கும். தைரியமாக தங்கினோம். காபி 150/- NTD இங்கு. மனசு வந்து வாங்கிய ஒரு பொருள் இது தான்.
இது பெரிய சைஸ் பீர்க்கங்காய் நார். விலை 100NTD


அன்றைக்கு தீபாவுக்கு Rice & Rajma வும் Cup-O-Noodles ம் தான்.

Friday, July 13, 2007

தைவான் பயணம்

" எல்லாரும் உங்க கம்பெனி ல தைவான் போறாங்களே, ஒரு முறை நானும் தான் போய்விட்டு வரேனே" என்று நான் இவரிடம் சொல்லியிருந்தேன். வாய்ப்பு வரும் காத்திரு என்று சொல்லியிருந்தார்.



ஆனால் எனக்கு தெரியும் அங்கே போனால் சாப்பாட்டுக்கு திண்டாட்டம் என்று. அதனால் என்ன? நமக்கு தான் ஆபத்பாந்தவன் MTR திடீர் உணவு உள்ளதே என்ற தைரியம்.



அந்த வாய்ப்பும் தீபா மூலம் கிடைத்தது. தீபாவை முன்னெச்சரிக்கை யாக தயார் செய்தேன், அவள் போவது VEGETARIANISM என்றால் என்ன விலை? என்று கேட்கும் நாட்டிற்கு என்று.அவளுக்கு கொஞ்சம் நம்ம ஊர் சாப்பாடு தான் சரி வரும். 5 நாள் தானே manage செய்து விடுவேன் என்று சொன்னாள்.



மே மாதம் முதல் வாரம் பயணம். MTR பொங்கல், Ashirwad Rice & Rajma மற்றும் Khakra எல்லாம் கட்டிக்கொண்டேன். புறப்பட்டேன்.



பயண விவரங்கள் இதோ...

04/05/07



சென்னையிலிருந்து பாங்காக் வழியாக தைபே (Taipei) சென்றோம்.



Thai Airways விமானம் எங்களை சென்னையிலிருந்து பாங்காக் அழைத்து செல்லும்போதே 25 mins லேட். அடுத்த connecting flight பிடிக்க 1 மணி நேரம் தான் இருந்தது. அதற்குள் Transfer ல் பெரிய Q'. நல்ல வேளை எங்கள் விமானத்தில் பயனிப்பவர்களை மட்டும் புதிய Q வில் சரி பார்த்து அனுமதி வழங்கினர்.



பாங்காகின் புதிய AIRPORT அது. சுவர்ணபூமி (suvarnabumi).



புதிய கட்டுமாணம். புதிய, பெரிய Arrivals & Departures. நின்று பார்க்க ஆசை தான். விமானம் கிளம்ப இன்னும் 30 நிமிடங்கள் தான் உள்ளது. தீபாவும், நானும் 2 kms ஓடி இருப்போம். Transfer Q' ஒரு end என்றால் எங்கள் விமானம் நிற்ப்பது மற்றோரு end.



இவ்வளவு அவசரமாக, காலையில் எதுவும் சாப்பிடாமல் விமானம் கிளம்புவதற்கு 5 min முன் ஏறி போய் உட்கார்ந்தோம்.



05/05/07



அதே அசதியில் தூங்இயும் போனோம். இந்த குறிப்பிட்ட route ல் அவ்வளவு கூட்டமும் இல்லை. ஆளுக்கு 4 சீட். காலை நீட்டி படுக்கலாம். பசி கூட நினைவு இல்லை.



சிறிது நேரத்திற்கு பிறகு அருகில் ஒரு குரள்.

" Madam! Good Morning!!. What would you like to have for Breakfast?"

பணிப்பெண் கேட்டார்.



எனக்கு அப்பொழுது தான் பசியே நியாபகம் வந்தது. தீபாவை எழுப்பிவிட்டு என்ன இருக்கிறது என்று கேட்டேன்.



அந்த நிமிடத்தில் தான் எங்கள் நிஜமான adventure trip ஆரம்பமானது.



முதலில் காபி கொடுத்த Airhostess, " Madam, would you like to have Pork Rice or Beef Rice?" என்று கேட்டாள். எங்களுக்கு ஷாக். Vegetarian Breakfast கொடு என்றால், அவளுக்கு புரியவுமில்லை.

அவளிடம் பேசுவதற்கு சக்தி யும் இல்லை எங்களுக்கு.

Bread ஐ காட்டி அது மட்டும் ஆளுக்கு 5 வாங்கி கொண்டு yoghurt ஐ சாப்பிட்டு வைத்தோம்.



தைபே வந்தது. மழை பெய்து கொண்டு இருந்தது. எங்களை அங்கிருந்து நேராக தைசுங்(TAICHUNG) அழைத்துப்போக ஒரு Van அனுப்பியிருந்தார்கள் எங்களின் தைவான் நண்பர்கள்.



நாங்கள் முன் பார்த்த சுவர்ணபூமி போல் இல்லாமல் சற்றே சிறிய Airport. பெயர் Taipei Chiang Kai-Shek International Airport.



தைசுங் போகும் வழி எல்லாம் மலைகள் தான். ரோட்டில் 10 meter கூட தெரியவில்லை. மழை காரணமாக mist வேறு.

3 மணி நேரம் ஆனது நாங்கள் தங்கும் ஹோட்டல் போய் சேர.

THE SPLENDOUR HOTELhttp://http//www.splendor-taichung.com.tw/tce/index.htm.

நகரின் மையப்பகுதியில் இருக்கும் 5 star Hotel. வெளியில் இன்னும் மழை. சுற்றும் கட்டிடங்கள் மயம்.

19வது தளத்திலிருந்து மழையில் தைசுங்....









தீபா ஹோட்டலின் வாசலில்..

ரூமுக்கு போய் முதல் வேலை சாப்பிட்டது தான். ரூமில் microwave நல்ல வேளையாக இருந்தது. கொண்டு போன பொங்கலில் ஒன்றை எடுத்து சூடு செய்து சாப்பிட்டோம்.

எங்கள் நண்பர்கள் மாலை வெளியே சாப்பிட அழைத்து போவதாக ப்ளான். கிடைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, குளித்து கீழே போய் காத்து இருந்தோம். சுமாராக ஆங்கிலம் பேசும் Front office பணியாளர்கள் இங்கே. பரவாயில்லை. நம் வேகத்துக்கு சரிப்பட்டு வரவில்லை தான்.

Phyllis San



எங்களை அழைத்துக்கொண்டு போக வந்து இருந்தார். அவர் எங்களுக்கு machines supply செய்யும் Agent.

அன்று இரவு Dinner ஒரு Indian Restaurant- ல். பெயர் CACTI. பெயருக்கு தான் இந்தியன். சமைப்பவர்கள் எல்லோரும் சைனீஸ் தான்.

எங்களுக்கு தைவானிலிருந்து moulds and machines எல்லாம் இறக்குமதி ஆகிறது. அவைகளை ஒரு agent மூலம் செய்கிறோம். இவர்கள் தான் அந்த நிறுவணம் நடத்துபவர்கள்.

CAROL CHIU & OMAR CHIU.


இனிமையாக பழகும் இவர்களுக்கு எங்களிடம் தனி அன்பு. அதுவும் OMAR க்கு இவரிடம் அலாதி பிரியம்.


சாப்பாடு சுமார் ரகம் தான்.

Dinner at Cacti
from left Omar, Omar& Carol's son Topy, Phyllis's daughter Chlorie, Phyllis




Another picture
from left: myself, Deepa, Senthil & Faye





இருந்தாலும் சாப்பிட்டு வைத்தோம்.

அதிலும் வரும் 2 நாட்கள் நாங்கள் போகும் சுற்றுலா வில் நம்ம ஊர் சாப்பாடு கஷ்டம் என்று Phyllis சொன்ன பிறகு உள்ளுக்குள் ஒரு நெருடல்.

இங்கே நாங்கள் ........


அடுத்த பதிவில் SUN MOON LAKE & PU LI பயணம் பற்றி..

Wednesday, July 11, 2007

கதை கேளு கதை கேளு - part 11


போன ப்ளாக் தொடர்ச்சி...

ஒரு வழியாக சம்மதம் கிடைத்த பின் ஊருக்கு போய் விட்டார்கள். இருந்தாலும் மனதுக்குள் சந்தேகம் இருந்து இருக்கும் போல. அடுத்த நாளும் வந்து என்னுடைய reaction ஐ பார்த்து விட்டு போனார்.

இப்படியாக எங்கள் திருமணம் நிரைவேறியது.

இதர்க்குள் எனக்கு தெரிந்து விட்டது இவருடைய குணம்.

வேலை என்று வந்து விட்டால் மற்றவை எல்லாம் ( அம்மா, அப்பா உள்பட) அப்புறம் தான்.

முன் கோபி...

அது இருக்கட்டும்.. எனக்கு கோபம் வராதா என்ன?

ஆனால் இவரின் கோபம் கண்டு இப்போதெல்லாம் எனக்கு வருவதே இல்லை.

சாப்பாடு, முக்கியமாக காபி நன்றாக இருக்க வேண்டும்.

இதில் நான் பிழைத்தேன். முதல் 1 மாதம் கஷ்டமாக தான் இருந்தது. அப்பொழுது எல்லாம் இவரின் சித்தப்பா, எங்கள் கூடவே இருந்தவர், தான் எனக்கு உதவுவார். இவருக்கு முன்னாலேயே சாப்பிட வந்து, சமையலில் என்ன குறை? என்ன செய்தால் சரி செய்யலாம் என்று சொல்வார்.

இரவில் திடீர் என்று பக்கத்தில் பார்த்தால் ஆள் இருக்க மாட்டார். 2nd shift ஐ பார்க்க surprise ஆக factory க்கு போய் இருப்பார்.

அப்போது நாங்கள் மதுரையில் இருந்தோம். திருநகரில் தான் ஜாகை. எனக்கு மறக்க முடியாத நாட்கள்.

இப்பொழுதும் அதே உற்சாகம், அதே commitment, அதே போல அயராது உழைக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இவரிடம் இருக்கிறது.

இன்றோ பொருப்புகளும் challenges ம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இதில் மயிலாடுதுறை, பாண்டிச்சேரி & சென்னை என்று காரில் அலைய வேண்டும்.

எனக்கு சில நாட்கள் தோன்றும்..
எப்படி இவரால் இப்படி அலைய முடிகிறது என்று.

ஒரு நாள் காரில் ஊருக்கு போய் வந்தாலே 4 நாட்கள் ஆகிறது எனக்கு உடல் நேராக.

அடிக்கடி இவர் சொல்லும் வாக்கியம் தான் அப்பொது எல்லாம் நினைவுக்கு வரும். " சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட, எலிக்கு தலையாக இருக்கலாம்"

நியாயம் தான். அதற்கு உழைத்தால் தானே முடியும்.

மதுரையை விட்டு சென்னைக்கு 1990 ல் வந்த போதே கையில் கிருஷ்ணா குழந்தை.

அப்போதிலிருந்தே நான் சென்னையில். இவர் எப்பொழுதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு.

கல்யாணம் ஆன மறு நாளே சொல்லிவிட்டார், வீட்டு நிர்வாகம் முழு பொருப்பும் என்னிடம் என்று.

அதனால் எனக்கு குடும்ப விஷயங்களில் இவரின் தலையீடு இல்லை.

இதில் அனுகூலமும் உண்டு. இடையூறும் உண்டு.

என் பிள்ளைகளின் பள்ளியில் இது வரை அவர்களின் அப்பா யாரென்றே தெரியாது.

இதையெல்லாம் நான் என் பார்வையில் Escapism என்று தான் சொல்வேன்.

இவரின் காரணம்..... நேரமின்மை.

அப்பாவுக்கு ரொம்பவே பயந்த... சரி சரி .... மரியாதை கொடுக்கும் பிள்ளை.

அம்மாவுக்கு எல்லாமே இவர் தான்.

First child syndrome..... கொஞ்சம் அதிகமாகவே உண்டு.

அது மற்றவர்களுக்கும் இருக்கிறது என்று புரிந்து கொள்ளத்தெரியாது.

தன் அம்மாவின் மறைவுக்கு அப்புறம் தன் பெண்ணிடம் அன்பு முழுவதையும் அள்ளி வைத்து இருப்பவர்.

மற்றவர்க்கு உதவுவதில் பாரபக்ஷம் பார்க்க மாட்டார்.

அவர்கள் அதை நியாபகம் வைத்து இருப்பார்களா என்று யோசிக்க மாட்டார்.

தான் வாழும் சமூகத்தின் மேல் ஒரு நம்பிக்கை உண்டு. நாட்டின் மேல் ஒரு பக்தி.

"கொஞ்சம் வேலை பளுவை குறைக்கலாமே" என்று சொன்னால், "நம் குடும்பத்தை மட்டும் பார்த்தால் போதாது. என்னை நம்பி 500 குடும்பங்கள் உள்ளது. அதை பார்" என்பார்.

PENNY WISE. POUND FOOLISH. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தம் இவர்.

ஆபீஸ் டென்ஷனில் இவர் கத்தும் போது, நமக்கு 'இதற்கு மேலும் இங்கு வேலை செய்ய வேண்டுமா?' என்று தோன்றும்.

எனக்கும் வீட்டை விட்டு ஓடி போக வேண்டும் போல இருக்கும்.

100% Man Manager என்று சொல்ல மாட்டேன்.

அதற்கு இன்னும் பொறுமை அவசியம்.

அது சற்று குறைவு இவரிடம். தான் சொல்வது நடக்கவில்லை என்றால் யாருக்கும் கோபம் வரும்.

இதை புரிந்தவர்கள் தான் இவரிடம் வேலை செய்ய முடியும்.

வசதி வாய்ப்புகள் இருந்தும் சிம்பிளான தேவைகள்.

55 வயதில் எனக்கு Retirement என்று சொல்லிக்கொண்டு இருப்பவர். ஆனால் ஒரு மணி நேரம் கூட வீட்டில் ஓய்வாக உட்காற முடியாது. இவரை அப்படி உட்காற வைத்தால் நாம் வீட்டில் இருக்க முடியாது.

வெளி பழக்கங்கள் எல்லாமே இது நாள் வரை professional contacts என்பதால் அதற்கு அப்பாற்பட்டு ஒரு உறவே கிடையாது.

நானும் ஒருமுறையேனும் தனியாக இவருடன் 10 நாள் எங்கேயாவது போய் வரவேண்டும் என்று நினத்தது உண்டு.
ம்.....ஹூம். அது இனியும் நடக்க வாய்ப்பு இல்லை.

தனிமையே பிடிக்காது இவருக்கு.

போதுமே சுதாகரனை பற்றி நான் எழுதியது.
அடுத்தது..........
முன்னமே சொன்னது போல
என் தைவான், தாய்லாந்து பயண அனுபவங்கள்.