Tuesday, April 03, 2007

கதை கேளு - part 5


எங்கள் ஊர்.........
நன்னிலம்........


திருவாரூரிலிருந்து 16 kms தொலைவில் இருக்கும் டவுனும் இல்லாமல், கிராமமும் இல்லாத ஊர். இந்த பகுதியில் எல்லோருக்கும் தெரிந்த ஊர். முன் காலத்திலிருந்து ஒரு பெரிய பஞ்சாயத்தாக இருந்து வரும் ஊர்.


என் தாத்தாவின் அப்பா வந்து குடியேரிய ஊர். எங்களுக்கு சொந்தமான வயல்கள் எல்லாம் 5kms தள்ளி 'பூங்குளம்' என்ற ஊரில் இருந்தாலும், 'ரைஸ் மில்" நன்னிலத்தில் தான் இருக்கிறது.'TWIN CITIES' போல் இதுவும் 'TWIN TOWNS'.
'முடிகொண்டான் ஆறு' நடுவில் ஓட ஆற்றின் தெற்கே 'நன்னிலம்' வடக்கே 'நல்லமாங்குடி'. ஸ்கூல், பஸ் ஸ்டாண்ட், பாங்க், கடைத்தெரு, ஆஸ்பத்திரி இப்படி எல்லா அத்தியாவசிய தேவைகளும் அக்கரையில் நன்னிலத்தில் இருக்க, நாங்கள் இருப்பதோ, இக்கரையில் நல்லமாங்குடி யில்.


எங்கள் பகுதியில் தான், PWD ஆபீஸ், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், தாலுக்கா ஆபீஸ் இப்படி எல்லாம் உள்ளது. எங்கள் வீடு இருப்பது அக்ரஹாரத்தில். இயக்குனர் சிகரம் K.பாலசந்தர் எங்கள் தெருக்காரர் தான். தெருவின் இரு பக்கமும் பிள்ளையார் மற்றும் பெருமாள் கோயில்கள். எங்கள் வீடும், பெரிய தாத்தாவின் வீடும் பக்கத்தில் ஒரே மாதிரி
இருக்கும்படி கட்டப்பட்டது. நாயன்மார்களால் பாடப்பட்ட 'மதுவனேஸ்வரர்' திருக்கோயில் (மேலே உள்ள படம்)

நன்னிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரை சுற்றி

நிறைய புகழ்பெற்ற கோயில்கள் உண்டு. என் சின்ன வயது அனுபவங்கள் எல்லாம் வருடா வருடம் கோலாகலமாக 10 நாட்கள் நடக்கும் ராமநவமி உற்சவம், மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா, தான்.

மற்றபடி எங்கள் வீடு தான் எனக்கு உலகம். 'ஓடியன்' தியேட்டரில் MGR சினிமா ஸ்பெஷல். அதே போல் இப்பொழுது போல் இல்லாமல், ஆற்றங்கரையில் கோடையில் சின்ன பிள்ளைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு இருங்த போது என் cousins மற்றும் friends உடன் போய் விளையாடியது மறக்கமுடியாது. ஆற்றில் தன்ணீர் வரும் காலத்தில், ஆடி 18 ன் போது பட்டாச்சாரியாரிடம் கொடுத்து செய்த பெரிய 'சப்பரம்' கொண்டு போய் விளையாடி, உண்ட நியாபகங்கள் நிறைய. சைக்கிள் கற்றுக்கொண்டு, வாடகைக்கு சின்ன அளவு சைக்கிள் எடுத்து, தினம் 2 மணி நேரம், சுற்றி இருக்கிறேன்.


இன்றளவில் இங்கே எங்கள் வீட்டில் தூக்கம் வருவது போல் எங்கேயும் வருவது இல்லை எனக்கு. அப்படி ஒரு secured feeling.


நன்னிலத்தில் எனக்கு பிடித்த
சில சமாச்சாரங்கள், 1. சின்ன வயதில் ஸ்கூல் விட்டு வரும் வழியில் பாட்டி கொடுக்கும் 5 பைசா விற்கு ஐஸ் ஃபாக்டரியில் கொடுக்கும் ஆரஞ்சு கலர் ஐஸ். 2. இப்பொழுதும் கிடைக்கும் வருத்த உப்பு நிலக்கடலை. 3. என் அம்மா வீட்டில் கிடைக்கும் கறந்த பசும்பால். 4. ஃப்ரெஷ் தண்ணீர் மற்ரும் காற்று.


ஊரைப்பற்றி நிறைய எழுதுவதற்கு இருந்தாலும் இப்போதைக்கு இவ்வளவே.


அப்பா....... இவரைப்பற்றி அடுத்த பதிவில்........

No comments: