Thursday, March 29, 2007

கதை கேளு- part 2

பாட்டி,
எனக்கு அம்மாவுக்கும் மேல்.
இது அம்மாவுக்கும் தெரியும்.
தமிழில் ஒரு வார்த்தை உண்டு, 'ஆளுமை' என்று. இதற்க்கு 'domination' என்று பொறுள் ஆங்கிலத்தில். பாட்டியும் ரொம்பவே dominant தான்.மயிலாடுதுறை அருகே 'அரயபுரம்' கிராமம் பாட்டி ஊர். அவர் அப்பா மயிலாடுதுரையில் புகழ் பெற்ற வக்கீல். வசதி யான குடும்பம் தான். புகுந்த வீட்டில் மாமியார், மாமனார் இல்லை. பெரிய மைத்துனர் குடும்பம் தான். ஆணால் பாட்டி வந்ததோ'enlarged heart' என்னும் தீரா வியாதியுடன். இடம், பொருள், ஏவல் புரிந்து செயல் படும் புத்தி கூர்மை, அபார நினைவுத்திரன், ஆட்களிடம் வேலை வாங்கும் திரண், இவை பாட்டியின் சில குணங்கள். காசு சேர்ப்பதில் கெட்டி. எந்த காரியம் செய்தாலும் அதில் நிரைவு இருக்கும். எப்போதும் புதுமைகளை யார் செய்தாலும் கேட்டு தெரிந்து கற்ப்பவர். சோம்பல் என்ற வார்த்தையே இருக்காது அவரிடம். பாட்டி எழுந்து வீட்டு வேலை எல்லாம் செய்து நான் பார்த்ததே இல்லை. தன் 35வது வயதிலிருந்து உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர். எல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து தான். வீட்டுக்குள் தான் நடை. பொருள் வாங்க கடைக்கு ஆள் அனுப்பினால் எந்த கடை, எங்கே இருக்கும் என்று சொல்லி அனுப்புவார். இது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், கடைத்தெருவுக்கே போகாதவர் சொன்னால்?பாட்டியிடம் கடுமை நிரையவே உண்டு. நான் பாட்டியின் கூட இருந்து படித்தது 2 வருடங்கள். 2 வருடமும் ஒரு MNC கம்பெனியின் executive போல் டைட் schedule. காலையில் கட்டாயம் 6 மணிக்கு எழும்ப வேண்டும். இல்லையென்றால் தலையில் வாளி நிறைய தண்ணீர் கொட்டப்படும். ஸ்கூல் முடிந்து திரும்பினால் ஸமஸ்கிருத க்ளாஸ், ஸ்லோக க்ளாஸ் இப்படி எல்லாம். 4 மாதத்துக்கு ஒரு முறை தான் சினிமா. எனக்கு தெரியும் பாட்டியின் செல்லம் என் அத்தை பையன் தான். அடுத்த இடம் எணக்கு.
எங்கள் குடும்பத்தில் பாட்டிக்கு சொல்லாமல் எதும் நடக்காது. நான் படித்து முடித்து வந்தவுடன் தன் உடல் நிலை காரணம் சொல்லி உடணே எணக்கு திருமணம் முடித்து விட்டார். அது நடந்தது 88' ல். பாட்டி மறைந்தது 2003' ல்.
என் 2 பிள்ளைகளையும் பார்த்து விட்டு தான் மறைந்தார். சமையல் அறையில் ஒரு இடத்தில் உட்கார்ந்த வாரே வீடு முழுக்க சமாளித்து விடுவார்.
மார்கழி மாதமானால் தானே வந்து முதல் நாள் போட்டு பார்த்த கோலத்தின் புள்ளிகளை வைத்து கொடுத்து விட்டு போவார். நாங்கள் கோலம் போட வேண்டும். புதிதாக யார் எந்த கோலம் போட்டாலும் அதை அன்றே கற்று விட வேண்டும். அதே போல் தான் சமையிலிலும். புதிதாக என்ன, யார் சமைத்தாலும் அதை செய்முறை வாங்கி செய்து பார்த்து விட வேண்டும்.பாட்டிக்கு தெரியாத கும்மி பாட்டுக்கள் இல்லை. எல்லாவற்றையும் ராகத்துடன் பாடுவார். இதை எல்லாம் தனி தனியே நோட்டு புக் போட்டு எழுதியும் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கணக்கு தவராமல் எழுதுவது, ஒரு டைரியில் தனியே அவரவர்களுக்கு கொடுக்க வேண்டிய, வர வேண்டிய கணக்கு தவறாமல் வைத்து இருப்பது அவருடைய குணம். இதற்க்கும் மேல் தனக்கு அப்புறம் என் அம்மா, பண்டிகை நாட்களில் யார் யாருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், யார் வீட்டு கல்யாணத்தில் எவ்வளவு மொய் இட வேண்டும் என்று எழுதியும் வைத்து இருக்க்கிறார். மல்லிகை பூக்கும் நாட்களில் எனக்கும் என் அத்தை பெண்ணுக்கும் ஜடை வைத்து பின்னல் தைத்து, அதை திருவாரூர் போட்டோ ஸ்டூடியோவில் போய் படம் பிடித்து கொண்டு வருவார்.அவ்வளவு organised. எளிதில் யாரையும் நம்பியும் விட மாட்டார். வெளியூருக்கு சென்றால் எண்ணி துனி மனிகள் எடுத்து வைத்து, திரும்ப ஊருக்கு கிளம்பும் போது எண்ணி pack செய்வார். துனி காயவில்லை என்றாலும் ஈரத்தையே தனியாக pack செய்துவிடுவார்.
எந்த நேரமும் பாட்டியை அழுக்காகவோ, தலை களைந்தோ பார்க்க முடியாது. எப்போதும் அப்படி ஒரு பளிச்.
என்னுடன் வந்து அவர் இருந்தது நான் மதுரையில் இருந்த போது தான். அப்போது எணக்கு திருமணம் ஆகி 4-5 மாதங்கள் தான். அதற்க்கே பெருமை பிடிபடவில்லை பாட்டிக்கு. அதிலும் மீணாக்ஷி கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போனதில் ஏக சந்தோஷம். மீணாக்ஷி கோயில் வாசலில் மல்லிகை கட்டு விற்பவரிடம் எப்படி அடர்த்தியாக கட்டுவது என்று கற்றுக்க்கொண்டு தான் வந்தார்.
உலகத்திலேயே நான்(வித்யா) மட்டும் தான் குழந்தை, மற்றவர்கள் எல்லாரும் பெரியவர்கள் என்ற எண்ணம் அவருக்கு. இது என் தம்பி தங்கையும் சேர்த்து. தன் உடல் நிலையால் 3-4 வருடங்கள் 30- 40 pulse/min லேயே வாழ்ந்தார். செயர்கையாக pace maker வைத்துக்கொண்டு 6 வருடம் வாழ்ந்தார். அதில் 3 வருடம் படுக்கையில். என் அப்பாவிடம் " ஒரு ஊருக்கும் என்னை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்து விடாதே. நான் இந்த ஊரிலேயே போறேன். ஐஸ் பொட்டிலயும் வெச்சுடாதே, உடனே எடுத்து விடு" என்றவர். மறைவதற்கு 2 நாட்கள் முன்பு என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி, நான் போக இயலாததால், எனக்காக ஐஸ் பெட்டியில் இரவு முழுதும் கிடந்தவர்.

தாத்தா......

இவரைப்பற்றி அடுத்தது

1 comment:

Anonymous said...

Wonderful !!!

Such a moving article. Never know you had such a talent in narration !!!

--- Devi