Wednesday, March 28, 2007

கதை கேளு! கதை கேளு!!

" என்னடா கொழந்த பாப்பா வையே பாத்துண்டே இருக்கே?" தொட்டிலில் கிடக்கும் 4 மாத பாப்பாவை பார்த்துக்கொண்டு இருந்த 4 வயது சிருவனை கேட்டார் தாத்தா. சிருவன் அம்மா, அப்பா, 10 வயது அக்கா, மாமா மற்றும் மாமியுடன் அந்த கிராமத்திற்கு வந்துள்ளான். பாப்பா மாமியின் அண்ணன் மகள். பிள்ளை பெற்று புகுந்த வீட்டிற்க்கு முதல் முறையாக வந்தவுடன் சொந்தங்களை அழைத்து தொட்டில் போடுவது தஞ்சாவூர் ஐயர் வீடுகளில் இன்றும் இருக்கும் வழக்கம். இதற்க்கு தான் சிறுவனும் வந்துள்ளான். மாமா பையணிடம் " ஏய்! பாப்பா எவ்ளோ அழகா இருக்கு பாத்தியா? அந்த தாத்தா கிட்ட போய் பாப்பாவை எனக்கு கல்யாணம் செஞ்சு தரேளா தாத்தா? னு கேளு" என்று சொல்லி தர, சிறுவனும் அவ்வண்ணமே கேட்டான். தாத்தா சொன்னார் " எனக்கு ஒன்னும் இல்ல டா கொழந்த, நாளைக்கு பெரியவள் ஆன அப்புறம் என் பேத்தியோ பால் வெள்ளை, உண்ணை கறுப்பா இறுக்கான் னு சொன்னா என்னடா செய்வேன்?" னு சொன்னதும் பையனுக்கு கொஞ்சம் முகம் தாழ்ந்தது. இருந்தாலும் சுதாரித்து கொண்டு " தாத்தா நான் நிறைய சோப் போட்டு குளித்து அதுக்குள்ள வெள்ளையா ஆகிடுறேன்" னு சொன்னான். இதை கேட்டவுடன் எல்லாரும் சிரித்தார்கள். சிரித்தவர்களுக்கு அப்போ தெரியவில்லை நிஜமாகவே இந்த பையனும் பெண்ணும் தான் சேர்ந்து வாழ போகிறவர்கள் எண்று.

சிறுவன் = என் அப்பா, பாப்பா = என் அம்மா.

அந்த காலத்தில், குறிப்பாக ப்ராமண சமூகத்தில், பால்ய விவாகம் தான் செய்வார்கள். பெண்ணாக இருந்தால் 10, 12 வயதுக்குள் கல்யாணம், பையனுக்கும் 15, 16 க்குள். தாத்தா காஞ்சி மடத்தில் பொறுப்பான பதவியில் இருந்த போதிலும், தொழில் என்னவோ ரைஸ் மில் தான். இதன் கூட காவிரி டெல்டா வில் விளை நிலங்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு என் அத்தைக்கு வரண் தேடியதில் தாமதம். அத்தை க்கு வயது 16 ஆகி பூப்படந்தும் விட்டார். தாத்தா வுக்கு 'கண்ணிகா தான" in the real sense, எண்ணம் பலிக்கவில்லை.சரி 'கண்ணீகா தானம்' வாங்கவாவது செய்யலாமே என்று தெரிந்த இடமான மைத்துனரின் மைத்துனர் மகள், என் அம்மா வை மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
அம்மா பிறந்த ஊரில் மா, பலா மரங்கள் ஏராளம். அம்மாவுக்கு விளையாட்டே மா மரத்தின் மேல் ஏறி மாங்காய்கள் பறிப்பது தான். என் அம்மா சொல்வார், "கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி தான் ரோடிலே போய் விளையாடுவதை நிருத்தினேன்" என்று. அம்மாவின் தோழர்கள் யார் தெரியுமா? அப்பாவின் மாமா பையன், அம்மாவுக்கும் அத்தை பையன் தானே, அப்பாவின் சித்தி பையன், பெண் இப்படி எல்லோரும்.
1 வாரம் நடந்ததாம் கல்யாணம். அம்மாவை அழைத்துக்கொண்டு என் அப்பாவின் ஊருக்கு போய் சேர்ந்து 1 நால் கூட ஆகவில்லை. திரும்பவும் பெண்ணை பெற்றவர்களுக்கு அழைப்பு வந்து விட்டது. "பெண் பெரிய மனுஷி ஆகிவிட்டாள், வாருங்கள்" என்றூ. மீண்டும் அமர்க்களம். கொண்டாட்டம். அப்பா வழக்கம் போல் படிக்க சென்னை க்கு போய் விட்டார். அம்மா புகுந்த வீட்டிலேயெ private tuition ல் தொடர்ந்து படிப்பார். லீவுக்கு அப்பா வரும் நாட்களில் தன் அம்மா வீட்டிற்கு போய் விடுவார். அம்மாவும் இப்படியே SSLC வரை பாஸ் செய்து விட்டார். அப்பா காலேஜ் முடித்து வக்கீலுக்கு படிக்க ஆரம்பித்து விட்டார்.
அப்பாவின் 23 வது வயதில் நான் பிறந்தேன். அம்மாவுக்கு 19 வயது.

பிறந்த ஊர் = சோழ நாட்டின் தலைநகர் தஞ்சாவூர்.

பிறந்ததில் ஒன்றும் புதினம் இல்லை.வீட்டின் தலை குழந்தை பெண்ணாக பிறந்ததில் எல்லாறுக்கும் மகிழ்ச்சி. குறிப்பாக அப்பாவை பெற்ற பாட்டிக்கு.

பாட்டி

இவற்களை பற்றி அடுத்த பதிவில்...........

2 comments:

Anonymous said...

Wonderful narration of events !! Way to go!! Waiting for " Kathai Kelu " Part - II

Anonymous said...

Wonderful narration of events !! Way to go!! Waiting for " Kathai Kelu " Part - II

- Devi , Chennai