Wednesday, July 11, 2007

கதை கேளு கதை கேளு - part 11


போன ப்ளாக் தொடர்ச்சி...

ஒரு வழியாக சம்மதம் கிடைத்த பின் ஊருக்கு போய் விட்டார்கள். இருந்தாலும் மனதுக்குள் சந்தேகம் இருந்து இருக்கும் போல. அடுத்த நாளும் வந்து என்னுடைய reaction ஐ பார்த்து விட்டு போனார்.

இப்படியாக எங்கள் திருமணம் நிரைவேறியது.

இதர்க்குள் எனக்கு தெரிந்து விட்டது இவருடைய குணம்.

வேலை என்று வந்து விட்டால் மற்றவை எல்லாம் ( அம்மா, அப்பா உள்பட) அப்புறம் தான்.

முன் கோபி...

அது இருக்கட்டும்.. எனக்கு கோபம் வராதா என்ன?

ஆனால் இவரின் கோபம் கண்டு இப்போதெல்லாம் எனக்கு வருவதே இல்லை.

சாப்பாடு, முக்கியமாக காபி நன்றாக இருக்க வேண்டும்.

இதில் நான் பிழைத்தேன். முதல் 1 மாதம் கஷ்டமாக தான் இருந்தது. அப்பொழுது எல்லாம் இவரின் சித்தப்பா, எங்கள் கூடவே இருந்தவர், தான் எனக்கு உதவுவார். இவருக்கு முன்னாலேயே சாப்பிட வந்து, சமையலில் என்ன குறை? என்ன செய்தால் சரி செய்யலாம் என்று சொல்வார்.

இரவில் திடீர் என்று பக்கத்தில் பார்த்தால் ஆள் இருக்க மாட்டார். 2nd shift ஐ பார்க்க surprise ஆக factory க்கு போய் இருப்பார்.

அப்போது நாங்கள் மதுரையில் இருந்தோம். திருநகரில் தான் ஜாகை. எனக்கு மறக்க முடியாத நாட்கள்.

இப்பொழுதும் அதே உற்சாகம், அதே commitment, அதே போல அயராது உழைக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இவரிடம் இருக்கிறது.

இன்றோ பொருப்புகளும் challenges ம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இதில் மயிலாடுதுறை, பாண்டிச்சேரி & சென்னை என்று காரில் அலைய வேண்டும்.

எனக்கு சில நாட்கள் தோன்றும்..
எப்படி இவரால் இப்படி அலைய முடிகிறது என்று.

ஒரு நாள் காரில் ஊருக்கு போய் வந்தாலே 4 நாட்கள் ஆகிறது எனக்கு உடல் நேராக.

அடிக்கடி இவர் சொல்லும் வாக்கியம் தான் அப்பொது எல்லாம் நினைவுக்கு வரும். " சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட, எலிக்கு தலையாக இருக்கலாம்"

நியாயம் தான். அதற்கு உழைத்தால் தானே முடியும்.

மதுரையை விட்டு சென்னைக்கு 1990 ல் வந்த போதே கையில் கிருஷ்ணா குழந்தை.

அப்போதிலிருந்தே நான் சென்னையில். இவர் எப்பொழுதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு.

கல்யாணம் ஆன மறு நாளே சொல்லிவிட்டார், வீட்டு நிர்வாகம் முழு பொருப்பும் என்னிடம் என்று.

அதனால் எனக்கு குடும்ப விஷயங்களில் இவரின் தலையீடு இல்லை.

இதில் அனுகூலமும் உண்டு. இடையூறும் உண்டு.

என் பிள்ளைகளின் பள்ளியில் இது வரை அவர்களின் அப்பா யாரென்றே தெரியாது.

இதையெல்லாம் நான் என் பார்வையில் Escapism என்று தான் சொல்வேன்.

இவரின் காரணம்..... நேரமின்மை.

அப்பாவுக்கு ரொம்பவே பயந்த... சரி சரி .... மரியாதை கொடுக்கும் பிள்ளை.

அம்மாவுக்கு எல்லாமே இவர் தான்.

First child syndrome..... கொஞ்சம் அதிகமாகவே உண்டு.

அது மற்றவர்களுக்கும் இருக்கிறது என்று புரிந்து கொள்ளத்தெரியாது.

தன் அம்மாவின் மறைவுக்கு அப்புறம் தன் பெண்ணிடம் அன்பு முழுவதையும் அள்ளி வைத்து இருப்பவர்.

மற்றவர்க்கு உதவுவதில் பாரபக்ஷம் பார்க்க மாட்டார்.

அவர்கள் அதை நியாபகம் வைத்து இருப்பார்களா என்று யோசிக்க மாட்டார்.

தான் வாழும் சமூகத்தின் மேல் ஒரு நம்பிக்கை உண்டு. நாட்டின் மேல் ஒரு பக்தி.

"கொஞ்சம் வேலை பளுவை குறைக்கலாமே" என்று சொன்னால், "நம் குடும்பத்தை மட்டும் பார்த்தால் போதாது. என்னை நம்பி 500 குடும்பங்கள் உள்ளது. அதை பார்" என்பார்.

PENNY WISE. POUND FOOLISH. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தம் இவர்.

ஆபீஸ் டென்ஷனில் இவர் கத்தும் போது, நமக்கு 'இதற்கு மேலும் இங்கு வேலை செய்ய வேண்டுமா?' என்று தோன்றும்.

எனக்கும் வீட்டை விட்டு ஓடி போக வேண்டும் போல இருக்கும்.

100% Man Manager என்று சொல்ல மாட்டேன்.

அதற்கு இன்னும் பொறுமை அவசியம்.

அது சற்று குறைவு இவரிடம். தான் சொல்வது நடக்கவில்லை என்றால் யாருக்கும் கோபம் வரும்.

இதை புரிந்தவர்கள் தான் இவரிடம் வேலை செய்ய முடியும்.

வசதி வாய்ப்புகள் இருந்தும் சிம்பிளான தேவைகள்.

55 வயதில் எனக்கு Retirement என்று சொல்லிக்கொண்டு இருப்பவர். ஆனால் ஒரு மணி நேரம் கூட வீட்டில் ஓய்வாக உட்காற முடியாது. இவரை அப்படி உட்காற வைத்தால் நாம் வீட்டில் இருக்க முடியாது.

வெளி பழக்கங்கள் எல்லாமே இது நாள் வரை professional contacts என்பதால் அதற்கு அப்பாற்பட்டு ஒரு உறவே கிடையாது.

நானும் ஒருமுறையேனும் தனியாக இவருடன் 10 நாள் எங்கேயாவது போய் வரவேண்டும் என்று நினத்தது உண்டு.
ம்.....ஹூம். அது இனியும் நடக்க வாய்ப்பு இல்லை.

தனிமையே பிடிக்காது இவருக்கு.

போதுமே சுதாகரனை பற்றி நான் எழுதியது.
அடுத்தது..........
முன்னமே சொன்னது போல
என் தைவான், தாய்லாந்து பயண அனுபவங்கள்.

No comments: