Tuesday, July 10, 2007

கதை கேளு கதை கேளு - part 10 ( அட... 10ஆம் தேதி 10 ஆம் பாகம்)




இன்றுடன் எனக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஓடி விட்டன.........
இதை விட எனக்கு அருமையான நாள் கிடைக்கப்போவதில்லை


என் 'அன்பு' (hahaha....) கணவரைப் பற்றி எழுத.....

அதனால் அவரைப்பற்றி.....
அவர் சுதாகரன்....

கல்லூரி படிப்பு முடியும் சமயம். Study Holidays க்கு நான் வீட்டிற்க்கு வந்து தங்கிய போது தாத்தா ஒரு file ல் நிரைய ஜாதகங்கள் வைத்து இருப்பதை பார்த்தேன். எனக்கு தெரியும் அதெல்லாம் எனக்கான வரண்கள் தான் என்று. எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. தாத்தாவிடம் எதிர்த்து பேசியே பழக்கம் இல்லை எனக்கு.அவர் எடுத்த முடிவுக்கு வீட்டில் அனைவரும் சரி சொல்வார்கள். இதில் நான் என்ன சொல்ல போகிறேன்?
ஆனாலும் 4 நாட்களுக்கு பிறகு ஒரு ஆர்வம். File ஐ திறந்து பார்த்தேன். 4-5 ஜாதகங்கள் இருந்தது. அதில் ஒன்று இவருடையது. பாட்டியும், மற்றவர்களும் பேசிக்கொண்டதை வைத்துஇவர் வீட்டிற்க்கு ஜாதகம் -official ஆக வாங்க போவதாக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள்.
யார் அம்மா, அப்பா,தங்கை, தம்பி மற்றும் என்ன ஊர் என்று பார்த்துக்கொண்டு வந்தேன். 2 நாட்களில் ஹாஸ்டலுக்கும் போய் விட்டேன் exams எழுத.
ஹாஸ்டலில் எனக்கு சில friends சிதம்பரத்திலிருந்து உண்டு. சுதாகருக்கும் சிதம்பரம் தானே. அதுவும் Annamalai University. அவர்களிடம் விசாரிப்பது என்று முடிவு.
எதோ பேசிக்கொண்டு இருக்கும்போது தீபா, ஸ்ரீநிவாசன் தெரியுமா? அவங்க அப்பா Geology Head of the Dept. அவங்க அண்ணன் சுதாகரனை தெரியுமா? என்று கேட்டேன்.
அவளோ தீபா தெரியும். வாசன் தெரியும். அவன் என் தங்கையின் classmate தான். ஆனால் நீ சொல்வது போல அவர்களுக்கு அண்ணன் கிடையாது. அப்படி ஒருத்தர் இல்லவே இல்லை, என்று சொல்லி விட்டாள். அப்புறம் இவர் ஒரு முறை சொல்லி தான் தெரிந்தது இவரை அந்த ஊரில் யாருக்குமே தெரியாது என்பது. இவர் பாட்டி வீட்டிலேயே வளர்ந்து படித்ததால், இப்படி இவர்களுக்கு ஒரு அண்ணன் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாதாம்.
அந்த சமயம் நாம் தான் தப்பாக பார்த்துக்கொண்டு வந்து விட்டோமோ என்று அதோடு விட்டு விட்டேன்.
April 23rd 1988, Exams முடிந்து வீட்டுக்கு வந்தேன். அதற்குள் பெண் பார்ப்பதற்க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. நானும் சண்டை போட்டேன். Choice of the Groom க்கு இல்லை. Choice of the Age Gap க்கு.
ஆமாம் எனக்கும் இவருக்கும் 9 வயது GAP. இன்று வரை வருத்தம் தான் எனக்கு. ஏன் என்றால் என் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் கூட 4 வயது தான் GAP.
எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வருத்தத்தில் தான் சண்டை. அடுத்த பாயிண்ட்.. ஏன் photo வாங்கி வரவில்லை? என்னுடைய album லிருந்து என் photo வை ( அதுவும் என் friend உடன் இருக்கும்) எடுத்து போன தாத்தா மற்றும் அத்தைஏன் அவர்கள் வீட்டில் கேட்டு அவர் photo வை வாங்கி வரவில்லை என்று சண்டை போட்டேன். இது எனக்கு மிகப்பெரிய வருத்தம். தாத்தா மாப்பிள்ளை photo பார்த்தேன். அவர் அந்த படத்தில் சில Japanese உடன் இருக்கிறார். எனக்கு தோனவில்லை. அவர்களிடம்photo வேண்டும் என்று கேட்க, என்று சொல்லிவிட்டார்.
அப்பா தான் சொன்னார். நீயே வந்து பார். பிடிக்கவில்லை என்றால் சொல்லு. அப்புறம் வேறு பையன் பார்க்கலாம் என்று.
அதிலிருந்து ஆரம்பித்தது என் பிடிவாதங்கள். பெண் பார்க்க பட்டு புடவை கட்ட மாட்டேன், பாட மாட்டேன் ( தெரிந்தால் தானே). நமஸ்காரம் செய்ய மாட்டேன் என்பவை சில.
என் பிறந்த நாள் April 29. அன்று தான் பெண் பார்க்க அத்தை வீட்டில் ஏற்பாடு. முதல் நாள் அம்மாவுடன் போக மறுத்து விட்டேன். மறு நாள் பாட்டியுடன் போனேன்.
மாலை மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். மாப்பிள்ளை யார் என்றே தெரியவில்லை. வந்ததில் 2 பெண்களும் உள்ளே வந்த போது தெரிந்தது 1 இவர் அம்மா, மற்றொன்று இவர் அத்தை என்று. அவர்கள் சொல்லி இவர் அப்பா வரவில்லை என்றும் தெரிந்தது.என்னை அழைத்து வந்து எல்லாருக்கும் நமஸ்காரம் செய்ய சொல்கிறார் தாத்தா. யார் மாப்பிள்ளை என்று தெரிந்தால் தானே செய்யலாம்.அந்த நேரத்தில் என்ன செய்வது? எல்லாருக்கும் செய்து வைத்தேன். அப்புறம் உள்ளே வந்து இவர் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் யார் அவர் பிள்ளை என்று.
இதில் ஒரு உண்மை... வந்ததில் ரொம்பவே smart ஆக இருந்தது Suresh Kumar தான். மாயவரத்திலிருந்து 7கி.மீஓடியே வந்தது போல தலை களைந்து இருந்தார் இவர்.
காபி, டிபன் சாப்பிட்ட அந்த நேரத்தில் அம்மாவையும், அத்தையையும் ரொம்பவே பிடித்தது எனக்கு. அவர்கள் நான் பட்டு புடவை கட்டாததை புகழ்ந்த போது மேலும் பிடித்தது.
இவர் அம்மா தான் ' உன்னுடன் என் பிள்ளை பேச வேண்டும் என்று சொன்னான், உங்கள் வீட்டில் தப்பாக நினைக்க மாட்டீர்களே' என்று கேட்டு அனுமதி வாங்கினார்.
எனக்கு தனியாக பேச இஷ்டம் இல்லை தான். இருந்தாலும் என்ன பேசுகிறார் என்று கேட்கலாமே என்று நினைத்தேன். எனக்கு தான் AGE GAP விஷயம் பெரிய திரையாக பின் மண்டையில் ஓடுகிறதே.
இவர் தான் பேசினார். ஆரம்பித்த உடனேயே கல்யாணம் செய்து கொள்வதற்கு சம்மதித்ததால் தான் பெண் பார்க்க வந்தேன். அதுவும் எனக்கு இஷ்டம் இல்லை. அம்மா தான் நீ வேண்டுமானால் பார்க்க வேண்டாம். ஆனால் அந்த பென் உன்னை பார்க்க வேண்டாமா என்று கேட்டார். அதனால் தான் வந்தேன் என்று சொல்பவரிடம் என்ன பேசுவது? தன் வேலை குணாதிசயங்கள்????? எல்லாவற்றையும் பற்றி பேசினார். நானோ 1 மணி நேரத்தில் 2 வார்த்தை பேசினேன். பேச கூட இல்லை. கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். கையில் ஒரு கர்ச்சீ. அதை மடிக்க வேண்டியது. திரும்ப பிரிக்க வேண்டியது, திரும்ப மடிக்க வேண்டியது.
இதை எல்லாம் என் Cousin Jyo பார்த்துக்கொண்டு இருந்ததை பார்ப்பது.
இவர் நினைத்து இருப்பார். பொண்ணு ரொம்ப அமைதி ன்னு. கடைசியாக உனக்கு என்ன issue என்று கேட்டார். நானும் சொன்னேன் AGE GAP தான் பெரிய issue என்று.
வலையில் மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தெரிந்த மீன் வெளியில் போக துடிக்கும். ஆனாலும் அதற்கு தெரியும் சாவதை விட வேறு மார்க்கமில்லை என்று. கடைசி வரை முயற்சி செய்வோமே என்று தான்.
அந்த நிலையில் தான் நானும். இன்னும் கொஞ்சம் காலம் கூடவே அம்மா வீட்டில் இருக்க ஆசை. அவ்வளவே தான்.
இன்னும் வரும்....

4 comments:

Anonymous said...

Enakku innum nee hanky madichathu nyabagam iruuku! :)
Jyo.

Anonymous said...

BTW, Happy Wedding Anniversary! Jyo.

Anonymous said...

Good one!! Waiting for part 2 of this story!!

vidhyamss said...

யாருப்பா இது? பெயர் போடாமயே கமெண்ட் போடறது??
ப்ளாக் ல மெம்பர் இல்லேன்ன்னா நீங்க அனானி யா தான் காமிக்கும். உங்க பேரையும் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.


JYO!!!!

நன்றி!!!