Friday, April 06, 2007

கதை கேளு - part-6


அப்பா.....

J.Ganesan BSc, BL, Advocate

அடடே ... இந்த படத்தை ஏன் முதல்ல போட்டேன்னா..........
கீழே படிங்க......

" டேய் குழந்தை யை முதன் முதலா பாக்க போகும் போது ஏதாவது பொம்மை வாங்கிண்டு போ" என்று நண்பர்கள் சொல்ல, நான் பிறந்ததும் அப்பா எனக்கு வாங்கி வந்த பொம்மை. ' காகம்' yeah!!! it was a crow.......couldn't have got a better toy to play with.........
2 வயதில் ஒரு நாள் தூங்கி எழ்ந்த போது என்னை கை பிடித்து தூக்கி விடுகிறேன் என்று கை நுனியில் பிடித்து தூக்கி, என் முழங்கையை உடைத்தவர். 'அப்பா, அப்போதிலிருந்து என் முழங்கை கோணல் தான்'
சின்ன வயதிலிருந்தே எனக்கு English Literature மேல் ஒரு மிகுதியான ஈடுபாட்டை வளர்த்தவர். அதற்க்காண பயிற்சியும் கொடுத்தவர்.
நான் 2 ம் க்ளாஸ் படித்த போதிலிருந்து தான், நினைவுகள் இருக்கிறது. அப்பொழுது எங்கள் ஜாகை திருவாரூரில். நன்னிலத்தில் கோர்ட் கிடையாது. அப்பா காலையில் நாங்கள் ஸ்கூல் போனபின் லேட்டாக எழுந்து குளித்து, கோர்ட் போய் வந்து, சாப்பிட்டு கிராமத்திற்கு போய் விடுவார்.
இரவு நாங்கள் தூங்கிய பின் திரும்ப வந்து படுப்பார். சனி, ஞாயிறு கிழமைகளில் வீட்டில் இருப்பார். எங்களை நன்னிலம் பைக்கில் கூட்டிக்கொண்டு போவார். அம்மா பஸ் ஸில் வருவார்.
ஃப்ரெண்ட்ஸ் நிறையவே உண்டு அப்பாவிற்கு. என் 10 வயதில் என் தங்கை பிறந்த போது எனக்கு முதன் முதலாக செய்தி சொன்னவர்.
9வது படிக்கும் போது என்னை கொண்டு போய் திருச்சியில் ஹாஸ்டலில் சேர்த்தார். எப்பாடு பட்டாவது அந்த ஜெயிலிலிருந்து வீட்டுக்கு வந்து 'உருப்படாமல்' போக என்ன வழி என்று யோசித்து நான் நடத்திய பல நாடகங்கள் நிறைவேராமல் தடுத்தவர்.
ஒரு முறை 'கடுமையான வயிற்று வலி' என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லியதும், அன்று மாலையே திருவாரூரிலிருந்து பைக் கில் வந்தார்.
"ஆஹா.... என்ன ஒரு அருமையான மனிதர்.... பெற்ற பெண்ணுக்கு கஷ்டம் னு சொன்னவுடன் அவளை அழைத்து போக உடனே வந்து இருக்கிறார்" னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க.
அவர் வந்தது டாக்டரான என் சித்தப்பாவுடன். அங்கேயே வைத்தியம் பார்த்து, மாத்திரை கொடுத்து விட்டு போனார்.
அப்படியாக என்னை கொஞ்சமாவது வாழ்க்கையில் தேற வைத்தவர்.
அப்பாவின் கோபம் பொல்லாதது. அது எனக்கு நன்றாகவே தெரியும்.
10 வதில் ஏதோ சுமாராக 78% வாங்கி பாஸ் செய்து விட்டேன். அடுத்தது +2. இதில் எனக்கு பிடித்த பாடங்களான sanskrit, english, advanced english எடுத்தாலும் கூடவே physic, chemistry and maths எடுத்து படித்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு.
என் ஊரிலிருந்து அப்பாவின் நன்பர் மகளும் இந்த ஹாஸ்டலில் படித்தாள். அவள் science with maths க்ரூப். பொதுத்தேர்வு முடிவுகள் வரும் வரை எனக்கு கொஞ்சம் பயம் தான். ரிஸல்ட்ஸ் வாங்க எங்கள் 2 பேரையும் அழைத்து போனார் அப்பா.
மார்க் வாங்கிய பின் அவர் முகம் போன போக்கை இன்றளவில் என்னால் மறக்க இயலாது. என்ன விஷயம் என்றால், அந்த பெண் மார்க் - 1067/1200
நான் சரி பாதி - 657/1200. கோபம் வரத்தானே செய்யும். ஆனால் அவருக்கு தெரியும் எதில் அதிகம் வேண்டுமோ அதில் நான் நிறைய எடுத்துள்ளேன் என்று. அது போதுமே காலேஜில் சேர.
அவளும் சேர்ந்தாள் 'அவினாசிலிங்கம்' கல்லூரியில். என்ன ப்ரயோஜனம்? படிப்பை முடிக்க வேணாமா? அதுக்குள்ளே கல்யாணம் செஞ்சுட்டாங்க வீட்டில்.
நான் படிப்பை முடிச்சுட்டேன். அது தானே முக்கியம்???
"அப்பா, என்னை BL படிக்க வை" னு நான் அவரிடம் கேட்டேன். பாட்டி தான் பயம் காட்டறாங்களே. அவங்க பேச்சை கேட்க வேண்டியதா போச்சு அவருக்கு. எனக்கும் கல்யாணம் செய்து வைத்து விட்டார். அவருக்கு பேரண், பேத்திகளை சீக்கிரம் பார்க்க ஆசை.
கஷ்ட படுறது நாம தானே?
இவ்வளவு இருந்தும் career ல் கவணம் அதிகம் உண்டு அவருக்கு. திருவாரூரிலிருந்து நன்னிலம் வருவதாக முடிவு செய்ததே நன்னிலத்தில் Magistrate & Munsif கோர்ட் வந்த பிறகு தான்.
தாத்தா, பாட்டிக்கும் வயதாகி வந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். கோர்ட் நன்னிலத்தில் திறக்க அவர் எடுத்த முயற்ச்சிகள் ஏராளம். இதற்கு நடுவில் தீவிர விவசாயம் வேறு.
ஆனாலும் அவருடைய முகத்தில் சோர்வு இருந்ததில்லை. அம்மாவுக்கு தப்பாத பிள்ளை தான்.
என் personal life ல் எனக்காக நிறைய தியாகங்கள் செய்தும் இருக்கிறார். " Sorry paa......You dont deserve this at all.."
So.... இனி இருக்கும் வரை அப்பாவுக்கும், அவர் மரியாதைக்கும் கேடு வராமல் இருப்பதற்க்கான முயற்ச்சிகள் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

6 comments:

Anonymous said...

Good One vidhya!!!

-Devi

vidhyamss said...

Thanks devi, I really need this kind of encouragement.

Anonymous said...

vidhya,
the narrations are good and nostalgic moments are brought in front. However the tamil spellings are to be checked. viz chinna 'na',periya 'na' chinna & periya'la' ,'il' 'in'etc. fine records of life. continue... wishes
jg

Anonymous said...

vidhya
excellant . looking back with nostalgia in life is very interesting. take care of tamil spelling. periya and chinna la,na,il,in etc.. do continue your efforts. wishes.
jg

vidhyamss said...

thanks pa,

spellings take a beating when narration is continuous and profound. Will take care of them in the future.
vidhya

Anonymous said...

Waiting for your next post vidhya.