Saturday, July 07, 2007

கதை கேளு, கதை கேளு- part-9



எனக்கு நன்றாக நினைவில் உள்ளது......


பிரசவத்திற்காக மயிலாடுதுறை போயுள்ள அம்மாவை பார்க்க வேண்டும் என்று 5 வது திருவாரூரில் படிக்கும் நான் அப்பாவை தொன தொனக்க Dec 26, 1977 அன்று அப்பா அழைத்துப் போனார்.

அம்மாவை பார்த்துவிட்டு அத்தை, அத்தான், அப்பா , அம்மா எல்லோருடன் அந்த வருடம் தீபாவளி ரிலீசான '16 வயதினிலே' நைட் ஷோ பார்த்துவிட்டு அடுத்த நாள் காலை திருவாரூர் போனேன்.


என் தங்கை 28 Dec பிறந்தாள்....


ஸ்ரீ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமே....


தவறாமல் நாங்கள் வைத்த பெயர் ஸ்ரீதேவி....

செல்ல பெயர்...... "மயிலு......"


குண்டு அழகு பாப்பாவை பெரிய அக்கா வான நான் போய் பார்த்த நாள் இன்னும் என் நினைவில் உள்ளது.

பிறந்த 11வது நாள்


இங்கு என் அப்பாவின் குமாஸ்தா தாத்தா வுடன்






அவள் சின்ன வயதில் அவளுடன் நான் அதிகம் இல்லை.





படிப்பு முடிந்து நான் வீட்டிற்க்கு வந்த போது அவளை ஹாஸ்டலில் அப்பா சேர்த்து விட்டார்.





மதுரையிலிருந்து நான் சென்னைக்கு வந்ததிலிருந்து (அவளுக்கு கல்யாணம் ஆனாலும்) இன்று வரை நான் தான் அவளுக்கு local guardian.





கலாக்ஷேத்ராவில் அவள் இருந்த போது மதியம் சாப்பாடு இடைவேளையில் தோழியுடன் என் வீட்டிற்க்கு வந்து விடுவாள்.





எனக்கு முதல் குழந்தை அவள்.





என் போல் ஸ்ரீராம் இல்லாமல் கொஞ்சம் அறிவு, சாமர்த்தியம் கோபம் ஜாஸ்தி உண்டு தேவிக்கு.





எதிலும் தன் வழியை தேர்ந்து எடுத்து அதில் உறுதியாக இருப்பவள்.





எங்கள் குடும்பத்தின் முதல் Masters பட்டம் பெற்ற பெண்.





தனக்கு தகுந்த சரியான துனையையும் தானே அமைத்துக்கொண்டு இன்று சந்தோஷமாக வாழ்பவள்.



இவள் இல்லையென்றால் எனக்கு ஒரு கை உடைந்தது போல.

இவள் US போன 1 வருடமும் எனக்கு எதோ ஒன்று இல்லாதது போன்ற வெறுமை தான்.

தினம் என் முகத்தை webcam ல் பார்க்கவில்லை யென்றால் உடனே இந்தியா வந்து விடுகிறேன் என்று அழுது ஒரு போன் வரும்.

எனக்கும் அப்படி தான்.

என் மகளிடம் இவளுக்கு தனி அன்பு. அவளுக்கும் தான். ஒரு வாரம் சித்தியை பார்க்காமல் இருந்ததில்லை ஸ்ரீநிதி.
ஸ்ரீநிதி யை பார்க்காமல் 10 நாள் இருந்தால் ...... அழுகை தான் தேவிக்கு.

US ல் இருந்த போது webcam லேயே பாடங்கள் நடக்கும் ஸ்ரீநிதிக்கு.

இப்பொழுது தனக்குள் ஒரு உயிரை சுமந்து கொண்டு இருப்பவள்.

அடுத்த பதிவில் ...........

என் தைவான், தாய்லாந்து பயன அனுபவங்கள்....

2 comments:

Anonymous said...

Hi! Vidya,

Really enjoyable... Brings back a lot of memories, keep blogging....

Love, Jyo.

Anonymous said...

Thanks a lot. This means so much to me !!!

Devi