Saturday, July 07, 2007

கதை கேளு -part 8


வந்துட்டேன்!!!!!!!!

ஒரு வழியா கிருஷ்ணாவை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு,ஸ்ரீநிதி யும் புது ஸ்கூலில் செட்டில் ஆயாச்சு. இனிமேல் கொஞ்சம் relaxed ஆக இருக்கலாம்.

இன்றைய பதிவில் என் தம்பி யைப்பற்றி......

ஸ்ரீராம் ..........



ராமர் பிறந்த வேளையில், ராமர் பிறந்த அன்றே பிறந்தவன்.

வீட்டின் ஸ்பெஷல் குழந்தை. தாத்தாவின் செல்லம்.

எனக்கு நல்ல friend. இது இப்பொழுது தான். சின்ன வயதில் நாங்கள் சேர்ந்து 1 minute இருந்தால் கூட சண்டை தான்.

அடி, உதை சண்டை தான் எப்பொழுதும்.

அவன் 5 வயதில் நான் பாட்டியின் வீட்டிற்கு படிக்க போய் விட்டேன். நான் மறுபடியும் அம்மா வீட்டிற்க்கு 8 வது படிக்க வந்த போது அவன் அத்தை வீட்டில் படிக்க போய் விட்டான். அதற்கு மேல் நான் ஹாஸ்டலில். அவனும் 8 வது படிக்க ஹாஸ்டலுக்கு. அதற்கு பிறகு தான் அவன் மேல் பாசம் வந்திருக்க வேண்டும் எனக்கு.

சின்ன குழந்தைகள் விஷமம் செய்யும். ஆனால் இவனைப் போல் யாருமே இல்லை.

என் அம்மாவின் சமையல் பாத்திரங்கள் பாதி திருவாரூர் கமலாலயத்தில் கிடக்கிறது. உடையும் வகைகளுக்கு இவன் கையால் மோட்சம் கிடைத்து விட்டது.
அதும் பால் குடிக்கும் பாட்டில்.. முன்பெல்லாம் கண்ணாடி பால் பாட்டில் தான் உண்டு.

இவன் உடைத்த பாட்டில்களுக்கு கணக்கே கிடையாது.

வீட்டில் இவனை சமாளிக்கவே 1 ஆள் வேண்டும்.

பிடிவாதமும் நிறைய உண்டு. அந்த காலத்தில் stretchelon material ல் Half pant வரும். அதை தவிர வேறு ஏதும் போட மாட்டான் இவன். ஒரு முறை அம்மா, அப்பா இன்னும் சில பேர் ஒரு function க்காக கோயம்புத்தூர் போகையில் வழியில் திருச்சி பஸ்ஸ்டாண்டில் இவன் சட்டைகள் வைத்த பெட்டி காணாமல் போய் விட கோயம்புத்தூரில் மறு நாள் காலை கடை திறக்கும் வரை ஒன்றுமே போடாமல் நின்றவன். நல்ல வேளை. அப்போ அவனுக்கு வயது 3.


பொறுப்பு & பொறுமை என்னை விட அதிகமாகவே இருக்கும் ஆத்மா இவன்.


Jack of all trades...


இவனுக்கு தெரிந்த சில கலைகள்.....


மிருதங்கம், drums, bagpiper, வில்லுப்பாட்டு,கொஞ்சம் கர்ணாடக சங்கீதம்..

இளையராஜாவின் தீவிர ரசிகன்....


எழுத்தாளர் சுஜாதா வின் பக்தன்...


உலகில் எந்த விஷயத்தை பற்றியும் தெரிந்து வைத்துக்கொண்டு பேச முடியும் இவனால்...


இன்று திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளின் தந்தை....


எங்கள் நிறுவணத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு அயராது உழைத்து வரும் அதிகாரி..


எனக்கு நம்பிக்கை நட்சத்திரம்.....

அடுத்த பதிவில் என் தங்கை........

1 comment:

Anonymous said...

WOW !!! Wonderful Piece !! Keep blogging!!

Devi